"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

12/21/2013

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எவ்வாறு மதிப்பது ?

இதற்கு முன் பெருமானார்(ஸல்) அவர்கள் தங்களுடைய மரணத் தருவாயில் தொழுகையை இருவருடைய துணையுடன் கால்கள் தரையில் இழுபட தொழச் சென்றது பின்வரும் சந்ததிகள் அதைப் பார்த்து பின்பற்ற வேண்டும் எனும் நோக்கிலாகும் என்பதை பார்த்தோம். இப்பொழுது அதே மரண தருவாயில் சக்ராத் ஹாலுடைய கடுமையான வேதனையின் பொழுது அண்ணலார் அவர்களுடைய நாவிலிருந்து கோபம் கொப்பளிக்க வெளியான வார்த்தை கூறும் அர்த்தத்தை பார்ப்போம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, தம் முகத்தின் மீது சதுரமான கருப்புத் துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும்போது அதைத் தம் முகத்திலிருந்து அகற்றி விடுவார்கள். அதே நிலையில் அவர்கள் இருந்து கொண்டிருக்க, யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கினார்கள்'' என்று கூறி, அவர்கள் செய்ததைப் போன்று செய்யக் கூடாது என்று (தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள். ஆதார நூல்: புகாரி, அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரலி) அவர்கள். 

இப்பொழுது லாஜிக்காக ஒரு விஷயத்தை சிந்திப்போம், தன் மீது உயிரையே வைத்திருந்த தந்தையுடைய உயிர் பிரியும் தருவாயில் இறுதியாக அவர்களது நாவிலிருந்து என்ன வார்த்தை வருகிறது எதைச் சொல்வார்கள் என்று ஆவலாக ஒவ்வொரு தனயனும் எதிர்பார்த்திருப்பர் அவ்வேளை அவர் எதாவது ஒன்றைக் கூறி இதை எனக்காக செய்யுங்கள் என்றுக் கூறினால் கேட்ட மாத்திரத்தில் அதை உயிரைப் பணயம் வைத்தேனும் இது எனது தந்தையுடைய இறுதி ஆசை என்று நிறைவேற்றுவதற்கு தயாராகுவோம் எங்ஙனமேனும் செய்து முடிப்போம் இதுவே தன் உயிரையே வைத்து வளர்த்தெடுத்த தந்தையை தனது உயிரலும் மேலாக மதித்ததாக கனிக்கப்படும்.

23 வருட நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் தங்களுடைய சமுதாயத்தவர்களுடைய மறுமை வாழ்க்கைக்காகவே அமைத்துக் கொண்டார்கள் அப்படிப்பட்ட நபியின் மீது உயிரையே வைத்துள்ளோம் என்றுக் கூறுகின்றவர்கள் நபியின் மரணத் தருவாயில் இறுதியாக சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் அவ்வாறு செய்தால் நபியை மதித்ததாகஉயிரிலும் மேலாக மதித்ததாக கருதப்படும்.

ஆனால் இங்குள்ள நிலைமை என்ன ? நபியை மதிக்கின்றோம் என்றுக் கூறிக் கொண்டு நபியுடைய சொல்லுக்கு எதிரான விஷயத்தை கொள்கையாக, மார்க்க கடமையாக ஆக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள்.
நபிகள் நாயகத்தை மதிப்பதால் தான் மௌலூது ஒதுகிறோம் பிறந்த நாள் கொண்டாடுகிறோம் என்றுக் கூறுகின்றவர்கள் அல்லாஹ்வை விட நபியை உயர்த்திப் பிடிக்கும் மொலூது புகழ்மாலையில் கூறப்படும் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே தருகிறோம்.

பாவமன்னிப்பு
நீங்களே பாவங்களை மன்னிப்பவர்.
அழித்தொழிக்கும் குற்றங்களையும் மன்னிப்பவர்.
தவறுகளை மறைக்கக் கூடியவரும் நீங்களே.
சிரமங்களை நீக்கக் கூடியவரும் நீங்களே.
நன்மைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளவரே!
உயர்ந்த மதிப்புடையவரே!
என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!
என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!
''யா நபி(நபியே!)'' என்று அழைத்துப் பாடப்படும் முதல் பாடலின் சில வரிகள் இவை. 

குற்றமும் பாவமும் செய்து விட்டவனே!
மன்னிப்புக்கேள்! குற்றத்தை ஒப்புக்கொள். அருளை எதிர்பார்.
சரணடைந்து விடு! (இத்தனையையும்) ஹரமில் (மதீனாவில்) தங்கியுள்ளவர்களிடம் கேள்!''
'சல்லூ அலாகைரில் இபாத்' என்ற பாடலின் சில வரிகள் இவை.
உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.
'யாஸையிதீ' என்ற பாடலின் வரி இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தும் இந்த வரிகளை உண்மை முஸ்லிம்கள் ஏற்க முடியுமா? குர்ஆனையும் நபிவழியையும் மதிக்கக் கூடியவர்கள் இந்த நச்சுக் கருத்தை ஆதரிக்க முடியுமாபாவங்கள் செய்தோர் அதற்கான மன்னிப்பை இறைவனிடம் தான் பெற வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். 

'அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?'  (அல்குர்ஆன்3:135)
'நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிறான்'  (அல்குர்ஆன்39:53) 

தன்னைத் தவிர வேறு எவரும் பாவங்களை மன்னிக்க முடியாது எனவும் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் அதிகாரம் தன்னிடம் மட்டுமே உள்ளது எனவும் அவற்றில் வேறு யாருக்கும் பங்கில்லை எனவும் இந்த வசனங்கள் மூலம் இறைவன் அறிவிக்கிறான்ஆதார நூல்: சுப்ஹான மவ்லிது

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய கடுமையான மரண வேதனையின் போது கோபம் கொப்பளிக்க கூறிய அல்லாஹ்வின் சாபம் யார் மீது இறங்கும் ? என்பதை சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம். 

பாவங்கள் மண்ணிக்கப்பட்டு விட்டதாக வாக்களிக்கப்பட்ட பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனிடம் பாவமண்ணிப்புக் கோருபவர்களாக இருந்துள்ளார்கள் என்று ஏராளமான அறிவிப்புகள் வந்திருக்கின்றன அவ்வாறிருக்கையில் அவர்களிடத்தில் பெரும்பாவங்களையெல்லாம் மண்ணிக்கக் கோரும் மௌலூது புகழ்மாலை கூறுவது ஏகத்துவமா ? இணை வைத்தலா

அரபு நாடுகளுக்கு தனது பிள்ளைகளை அனுப்பி வைத்தால் பொருளீட்டுவதுடன், மார்க்க அறிவையும் ஈட்டி வருவார்கள் என்றுக்கருதி அதிக சம்பளம் கிடைக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை தவிர்த்து அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் அரபு நாடுகளிலும் சில முஸ்லீம் பெயர் தாங்கி அமைப்புகள் ரபியுள் அவ்வல் மாதங்களில் ஊரிலிருந்து மார்க்க அறிஞர்கள்(?) வரவழைக்கப்பட்டு நபிகள் நாயகத்தின் பெயரால் பிறந்த நாள் விழா (?) நடத்துகிறார்கள் இதைப் பார்க்கும் பாமர முஸ்லீம்கள் இங்கும் பிறந்த நாள் விழா நடத்தப்படுவதால் இது மார்க்க அங்கீகாரம் பெற்றவைதான் என்று நினைத்தால் அவரகளுடைய மறுமை நிலை என்னவாகும் என்பதை அந்த சகோதர அமைப்புகள் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.

நேரத்தை ஒதுக்கி பொருளை விரயம் செய்து மார்க்கம் என்ற பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளால்  மார்க்க ஞானம் வளர வேண்டும் மாறாக அஞ்ஞானத்திற்கு கொண்டு போய் விடகூடாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத, அனுமதிக்காத ஒன்றை யார் உருவாக்கினாலும் அது இறைவனால் நிராகிரக்கப்படுவதுடன் அதற்கான மறுமை பலனும் '' 0 '' வாகி விடுவதுடன் பாவப்பட்டியலிலும் சேர்க்கப் பட்டு விடும் என்பதை கீழ்கானும் நபிமொழி எச்சரிக்கிறது. நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவர் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா சித்தீக்கா (ரழி) அவர்கள். நூல் : புகாரி, முஸ்லிம்

கப்று வணக்கத்தை உள்ளேப் புகுத்தி, அதை சிலை வணக்கமாக மாற்றி நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் செய்து விட்டால் இஸ்லாம் தனித்து விளங்காது என்ற யூத, நஸ்ரானிகளுடைய சதித் திட்டம் ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த ஷியாக்கள் மூலமாக முதலில் திணிக்கப்பட்டு  அதற்கடுத்து அவர்களுடைய சதி திட்டம் செம்மையாக ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டுவரை குறைந்தது 9 நூற்றாண்டுகள் அரோபியாவில் தொடங்கி ஆசியா கண்டம் முழுவதுமாக கப்று வணக்கம் கோலோச்சியது.

இதற்கு முன் சென்ற சமுதாயம் இறைதூதர்களுடைய கப்றை வணங்குமிடமாக ஆக்கிய வரலாறு அறிந்திருந்ததால் பெருமானார்(ஸல்) அவர்கள் தங்களது மரணத் தருவாயில் கடும் வெப்பத்தால் துடித்துக் கொண்டிருக்கும் போதும் மிக சிரமத்திற்கு இடையே மேற்கானும் வார்த்தைகளை கூறினார்கள். மீலாது விழாவை ஊர்வலமாகவும், மொலூதை அல்லாஹ்வின் ஆலயத்தில் வைத்து ஓதுபவர்களும் மேற்கானும் யூத, நஸ்ரானிகளுடைய சதி திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இருண்ட இஸ்லாமிய வரலாற்றை சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றனர்.

தன்பை பெற்று வளர்த்து ஆளாக்கிய தனது தந்தையுடைய கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக எந்தளவு தனயன் முயற்சியில் இறங்குவாரோ அதை விட நம் நபியுடைய இறுதி ஆசை முக்கியமல்லவா ?  எவரும் தன்னுடைய தந்தை, மகனை விட உலக மக்கள் அனைவரையும் விட நான் அவருக்கு அதிக விருப்பமானவனாக ஆகும்வரை முஃமினாக முடியாது. என்று (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் கட்டளையிட்டிருக்க அதற்கு எதிராக தன் தந்தை மகன், மற்றும் உறவினர்கள், உலக மக்கள் அனைவரும் ஒரு கருத்தைக் கூறினாலும் அல்லாஹ்வின் தூதரின் கருத்திற்கே முதலிடம் கொடுத்து மற்றவர்களின் சொல்லை நிராகரித்து விடவேண்டும் என்பதை மேற்கானும் நபிமொழி கூறுகிறது.
----------------#----------------------#--------------------------#------------------------#--------------#------------#-------------#

மௌலூதை உருவாக்கியது யார் என்பதை காண இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்